இரண்டாந்தாரமானார் அஞ்சலி...


அஞ்சலிக்குத் திருமணம் ஆகிவிட்டது. அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டார். இதுதான் இன்றைய திகதியில் தென்னிந்திய சினிமா வட்டாரங்களில் அலையடிக்கும் விவகாரம். சினிமா-அரசியல் அறிந்தவர்கள், ஆந்திர நண்பர்கள் எனப் பலரிடமும் விசாரித்ததில் கிடைத்த செய்தி இது. 'அவர் இந்தியா அறிந்த அரசியல் பிரபலம். அவரின் மகன் சினிமா தயாரிப்பிலும் இருக்கிறார். மகனின் சினிமா தயாரிப்புக்கு உதவியாக இருக்க அனுப்பப்பட்டவர்தான் அவரின் மருமகன். அப்போது அஞ்சலிக்கும் அவருக்கும் பழக்கம் ஏற்பட்டு இருக்கிறது.

காதலில் உருகியிருக்கிறார்கள். இந்த விஷயம் அரசல் புரசலாக அரசியல் புள்ளிக்கும் அவரின் மகனுக்கும் தெரியவந்தது. 'அரசியல்ல இருக்கோம். இதெல்லாம் வெளிய தெரிஞ்சுதுன்னா, நம்ம குடும்பத்துக்கே அசிங்கம்' என மருமகனைத் தடுத்தார்கள். மாமனாருக்குப் பயந்து அஞ்சலியுடனான காதலை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தார் அந்த மருமகன்.

இந்த நிலையில்தான் கடந்த ஏப்ரல் மாதம் தெலுங்குப் படப்பிடிப்புக்குப் போன இடத்தில் மாயமானார் அஞ்சலி. ஐந்து நாட்கள் கழித்து 'பெங்களூருல் இருந்தேன் என்று திரும்பி வந்தார். ஆனால் யாருடன் இருந்தேன் என்பதைப்பற்றி அவர் மூச்சுவிடவில்லை.

அரசியல் மருமகனுடன்தான் அவர் தங்கியிருந்திருக்கிறார். இவர்கள் நெருக்கமாக இருந்தாலும்கூட, காதல், கல்யாணம் அளவுக்கு இறங்குவார்கள் என அரசியல் குடும்பத்தார் எதிர்பார்க்கவில்லை. ஒருகட்டத்தில் இருவரும் அடுத்தடுத்து சந்திக்கச் சந்திக்க கடும்கோபம் கொண்டு இருவரையும் எச்சரித்துள்ளார் அரசியல் புள்ளி.

ஆனால் மருமகன் - அஞ்சலி ஜோடி மசியவில்லை. மிரட்டலுக்கும் கலங்கவில்லை. மகள், மகன் என அரசியல் புள்ளியின் குடும்பமே கெஞ்சி கதறியிருக்கிறது. ஆனால் இருவரும் காதலில் விடாப்பிடியாக நிற்க, அரசியல் புள்ளிக்கு வேறு வழி தெரியவில்லை. நண்பர் ஒருவரின் உதவியுடன் மகளும் மருமகனும் குடும்பத்துடன் அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டனர்.


இப்போது இந்தப் புதுப் புயல் என்கிறார் மருமகன் குடும்பத்தை நன்கு அறிந்த அரசியல் புள்ளி. சினிமா வட்டாரத்தில் விசாரித்தோம். 'சித்திபாரதிதேவியின் கெடுபிடியான கட்டுப்பாட்டில் இருந்தால், இனி எங்கும் நகர முடியாது என்பது அஞ்சலிக்கே நன்றாகத் தெரியும். அதனால் கடத்தல் நாடகமாடி, சித்தியைவிட்டுப் பிரிந்திருக்கிறார்.

பிறகு ஆந்திராவில் சொந்த வீட்டில் இருந்தவர், மீண்டும் மருமகனுடன் நெருக்கமாகியிருக்கிறார். அவரின் ஆலோசனையின்படியே அஞ்சலி மேற்கொண்டு எந்தப் படங்களிலும் கமிட் ஆகவில்லை. இந்த நிலையில்தான் இருவரும் அமெரிக்கா சென்றுவிட்டதாகக் கூறுகிறார்கள்.

அஞ்சலிக்கு உடல்நலக் குறைவு உண்டு. அதற்காக சென்னை அண்ணா நகரில் ஒரு பிரபல மருத்துவரிடம் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இதற்கிடையில் அவர் காணாமல்போன சமயத்தில் பெங்களூரில் இருந்து 18 முறை அந்த டாக்டரிடம் இருந்து பேசி, தான் சாப்பிடவேண்டிய மருந்து மாத்திரைகள் குறித்துப் பேசியிருக்கிறார். அந்த மருந்துகள்கூட மருமகனின் ஆட்கள் உதவியுடன் சென்னையில் இருந்தே வாங்கி அனுப்பப்பட்டுள்ளன. இந்தத் தகவல் ஆந்திர பொலிஸ் விசாரணையின்போது தெரியவந்தது' என்கிறார்கள்.

'கோல்மால்' தெலுங்கு திரைப்படத்தை தயாரித்த கிஷோர், 'பொதுவா தெலுங்கு தயாரிப்பாளர்கள் தங்கள்; படங்களில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கு பிரச்சினை என்றால், அதை தன் பிரச்சினையாக பார்ப்பார்கள் அப்படி அஞ்சலி எங்கள் படத்தில் நடித்தபோது அவருக்குப் பிரச்சினை வந்தது. அதை தற்காலிகமாக சமாளித்து எங்கள் படத்தில் நடிக்க வைத்தோம். படப்பிடிப்பு முடிந்துவிட்டது. அதற்கடுத்து அவர் எங்கள் தொடர்பிலேயே இல்லை' என்றார்.

'மதகஜராஜா' படத்தை தெலுங்கில் டப்பிங் செய்து 'நடராஜு தானே ராஜு அதாவது என்.டி.ஆர். என்ற பெயரில் வெளியிடுகிறார் விஷால். அவரும் அஞ்சலியைத் தேடி வருவதாக தகவல் கிடைக்க, அவரிடம் பேசினோம். 'எங்க இருக்காங்கன்னே தெரியலைங்க. அவங்களோட குரல் ஆந்திர ரசிகர்களுக்கு நல்ல பரிட்சயம். அதனால என்.டி.ஆர் படத்துக்கு அவங்க டப்பிங் பேசினாத்தான் சரியா இருக்கும்னு தேடினோம். இதுவரைக்கும் அவங்க சிக்கவே இல்லை' என்றார் வருத்தமான குரலில்.

அஞ்சலிக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்ந்துள்ள களஞ்சியம், 'சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நான் தொடர்ந்த வழக்கில் ஆஜராகச்சொல்லி அவருக்கு அனுப்பிய மூன்று சம்மன்களுமே திரும்பவந்துவிட்டன. விலாசமற்றவர் என முடிவுசெய்து தமிழ், தெலுங்கு நாளிதழ்களில் நிதிமன்றத்தில் ஆஜராகச்சொல்லி விளம்பரம் தரச்சொல்லி நீதிபதி உத்தரவிட்டுள்ளார். அடுத்தவாரம் அந்த விளம்பரம் தர உள்ளோம்' என்றார் கோபமான குரலில்.

எது எப்படியோ, சினிமா புகழ், மீடியா வெளிச்சம், படப்பிடிப்பு பரபரப்பு எல்லாவற்றையும் விட்டுவிட்டு தனக்கான ஒரு வாழ்க்கையை அஞ்சலி அமைத்துக்கொண்டார் என்றே தோன்கிறது.